ஐ.ஏ.எஸ் அதிகாரி ஓட்டிய கார் மோதி பத்திரிகையாளர் பலி

 

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஓட்டிய கார் மோதி பத்திரிகையாளர் பலி

ஐ.ஏ.எஸ். அதிகாரி வேகமாக ஓட்டி வந்த கார் மோதி பத்திரிகையாளர் முகமது ப‌ஷீர் பலியாகியுள்ளார். 

கேரளா: ஐ.ஏ.எஸ். அதிகாரி வேகமாக ஓட்டி வந்த கார் மோதி பத்திரிகையாளர் முகமது ப‌ஷீர் பலியாகியுள்ளார். 

மலையாள நாளிதழ் ஒன்றின் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் கே.எம்.பஷீர் (35). மலப்புரத்தைச் சேர்ந்த அவர் மியூசியம் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பஷீர் உயிரிழந்தார்.

அந்த காரை  போதையில் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஓட்டி வந்ததாகவும், நிதனம் இல்லாமல் சென்றதாகவும் அங்கு இருந்த பொது மக்கள் குற்றம்ச் சாட்டினர். ஆனால் தான் காரை ஓட்டவில்லை என்றும் தனது பெண் நண்பர் தான் காரை ஓட்டியதாகவும் அதிகாரி ஸ்ரீராம் போலீ சாரிடம் தெரிவித்துள்ளார். 

ஆனால், அவர் தான் போதையில் காரை ஒட்டியதாக பொதுமக்கள் ஆணித்தரமாகக் கூறினர். அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மனைக்கு வந்த மாஜிஸ்திரேட், அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.