ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு !

 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு !

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சிபிஐ வழக்கிலிருந்து சிதம்பரத்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால், கடந்த  அக்டோபர் 16ம் தேதி அமலாக்கத்துறையினரால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

ப.சிதம்பரம்

சிபிஐ வழக்கிலிருந்து தப்பி, அமலாக்கத்துறையினரிடம் சிக்கிக் கொண்ட சிதம்பரம் உடல் நிலை சரியில்லாததால் ஜாமீன் கேட்டு வழக்குப் பதிவு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையைப் பார்த்து விட்டு  பா.சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டு வந்த காவல் தண்டனையை நீடித்தும் வழக்கை ஒத்தி வைத்தும் தீர்ப்பளித்தது. 

ப.சிதம்பரம்

அதனைத் தொடர்ந்து இன்று அந்த வழக்கு மீண்டும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் தலைமையில் விசாரிக்கப்பட்டது. அதில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும், பொருளாதார குற்றத்தைத் தீவிரமாகக் கருத வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள இந்நிலையில், சிபிஐ வழக்கிலிருந்து சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.