ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்து கேட்கும் லாலுவின் மகன்

 

ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்து கேட்கும் லாலுவின் மகன்

லாலு பிரசாத் யாதவின் மகன்  திருமணமான 6 மாதத்திலேயே மனைவியிடம் இருந்து விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மகன்  திருமணமான 6 மாதத்திலேயே மனைவியிடம் இருந்து விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ். தேஜ் பிரதாப் யாதவுக்கும் , பீகார் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரின் மகள் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான வி.ஐ.பி.-க்கள் உட்பட 10,000 பேர் கலந்து கொண்டனர். இதனையடுத்து இவர்களது இல்லற வாழ்க்கையில் திடீரென பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தேஜ் பிரதாப் யாதவ் தனக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

prasath  

பாட்னா நீதிமன்றத்தில், விவகாரத்து கோரி தேஜ் பிரதாப் யாதவ் மனு தாக்கல் செய்து இருப்பது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் உடனடியாக தேஜ் பிரதாப் யாதவின் தாயார் ராப்ரி தேவி வீட்டுக்குச்சென்றார். இதற்கிடையே, சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவும், தேஜ் பிரதாப் யாதவ் உடனடியாக தன்னை சந்திக்க வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விவாகரத்து மனுவை வாபஸ் பெற வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.