ஐரோப்பிய மாணவியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தொழிலதிபர் கைது!

 

ஐரோப்பிய மாணவியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தொழிலதிபர் கைது!

இவர்களது பழக்கம் காதலாக மாற அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனால் அந்த பெண்ணை சென்னை அழைத்து வந்துள்ளார்  ரூமேஸ் அகமது

சென்னை: ஐரோப்பிய நாட்டை  சேர்ந்த மாணவியை  காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய தொழிலதிபர் மற்றும் அவரது தந்தையை  போலீசார் கைது செய்தனர். 

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ரூமேஸ் அகமது என்ற 30 வயது நபர் ஒருவர் வெளிநாடுகளுக்கு இறால் ஏற்றுமதி செய்து வருகிறார். அதன்படி துபாய் சென்ற அவருக்கும் ஐரோப்பிய நாடான லித்வேனியாவிலிருந்து துபாயில் தங்கி படித்து வந்த மாணவி உக்னே பெரவேரி செவைத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் காதலாக மாற அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனால் அந்த பெண்ணை சென்னை அழைத்து வந்துள்ளார்  ரூமேஸ் அகமது.  பிறகு அந்த அப்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக உறுதி கூறி, ரூமேஸ் அகமது மற்றும் அவரது தந்தை கட்டாயப்படுத்திக்  கருக்கலைப்பு செய்துள்ளனர்.  பிறகு மீண்டும் இவரும் துபாய் சென்று ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில்  அந்த பெண் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

europe

இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியை மீண்டும் சென்னை அழைத்து வந்த  ரூமேஸ் அகமது  எழும்பூரில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கவைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். 

இதையடுத்து அப்பெண் வ ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸில்  புகார் அளித்தார். 
இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் ருமேஷ் அகமது , உடந்தையாக இருந்து பெண்ணை மிரட்டிய அவருடைய தந்தை தொழில் அதிபர் அப்துல் கரீம் என்பவரை கைது செய்தனர்.