“ஐயம் பேக்”… மீண்டும் மாஸாக ரீ என்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ!

 

“ஐயம் பேக்”… மீண்டும் மாஸாக ரீ என்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ!

ஈஸ்வரின் துணை இல்லாமல் தன் மகளை வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்த ஜெயஸ்ரீ மீண்டும் அவரது நடனப்பள்ளியைப் பழைய உத்வேகத்துடன் தொடங்கியுள்ளார்.

கடந்த மாதம், சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தன் கணவர் ஈஸ்வர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், ஈஸ்வர்  சீரியல் நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன்னை கொடுமைப் படுத்துகிறார் என்றும் தனது மாமியாரும் அதற்கு உடந்தையாக இருக்கிறார் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

ttn

அதுமட்டுமில்லாமல், தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் பேரில் நடிகர் ஈஸ்வரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் எல்லாவற்றிற்கும் ஈஸ்வர், மகாலட்சுமியுடன் கள்ளத்தொடர்பில் இருப்பது தான் காரணம் என்று ஜெயஸ்ரீ பல மீடியாக்களுக்கு பேட்டியளித்தார். 

tn

இந்த பிரச்சனைக்குப் பிறகு ஈஸ்வர் வீட்டிலிருந்து வெளியேறிய ஜெயஸ்ரீ, தன் மகளுடன் வசித்து வருகிறார். ஈஸ்வருக்கும் ஜெயஸ்ரீக்கும் இந்த பிரச்னை தொடங்கியதில் இருந்து ஜெயஸ்ரீயின் மகள், அவருக்கு பெரும் உறுதுணையாக இருப்பினும், மன அழுத்தம் காரணமாக ஜெயஸ்ரீ கடந்த மாதம் 16 ஆம் தேதி தற்கொலை முயற்சி செய்தார். அதன் பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். 

tn

இதனையடுத்து, ஈஸ்வரின் துணை இல்லாமல் தன் மகளை வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்த ஜெயஸ்ரீ மீண்டும் அவரது நடனப்பள்ளியைப் பழைய உத்வேகத்துடன் தொடங்கியுள்ளார். இதனிடையே ஜெயஸ்ரீயின் மகளுக்கு விஜய் டிவியில் ‘ பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என்னும் சீரியல் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் இப்போது அந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.

ttn

இந்நிலையில் நடிகை ஜெயஸ்ரீ அவரது பேஸ்புக் பக்கத்தில், “Im back..!” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும், ” சூப்பர் அக்கா, நீங்க எப்படி இருக்கிங்க, எல்லாத்தையும் கடந்து வந்துடீங்க, இனிமே எல்லாம் நல்ல படியா நடக்கும், சிங்கப்பெண்ணே” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.