ஐபோன்களில் டிராய் மொபைல் ஆப்-க்கு அனுமதியளித்த ஆப்பிள் நிறுவனம்

 

ஐபோன்களில் டிராய் மொபைல் ஆப்-க்கு அனுமதியளித்த ஆப்பிள் நிறுவனம்

ஐபோன் மாடல்களில் டிராயின் மொபைல் செயலியை அனுமதிக்க ஆப்பிள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

மும்பை: ஐபோன் மாடல்களில் டிராயின் மொபைல் செயலியை அனுமதிக்க ஆப்பிள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் ‘TRAI DND – Do Not Disturb’ மொபைல் ஆப் 2016-ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இந்த செயலி பயனர்களுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உள்ளிட்டவற்றை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்து தேவையற்ற கான்டாக்ட்களிடம் இருந்து விலகியிருக்கச் செய்கிறது.

இந்த செயலியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்தாண்டு வெளியிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனம் டிராய் ஆப்பை தனது ஆப் ஸ்டோரில் அனுமதிக்காமல் இருந்தது. ஜனவரி 2019-ஆம் ஆண்டுக்குள் ஐபோன்களில் டிராய் உருவாக்கிய இந்த செயலியை அனுமதிக்கவில்லை என்றால் ஐபோன்களில் இந்திய செல்லுலார் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தற்போது வேறு வழியின்றி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் டிராய் டி.என்.டி செயலியை அனுமதிக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிராயின் செயலி தற்போது கிடைக்கிறது. ஐ.ஓ.எஸ் 12.1 மற்றும் அதற்கும் அதிக வெர்ஷன்களின் ஆப் ஸ்டோரில் டிராயின் டு நாட் டிஸ்டர்ப் செயலி ஏற்கனவே கிடைக்கிறது.