ஐபோனுக்காக கிட்னியை விற்ற இளைஞரின் பரிதாப நிலை: என்ன நடந்தது தெரியுமா?

 

ஐபோனுக்காக கிட்னியை விற்ற இளைஞரின் பரிதாப நிலை: என்ன நடந்தது தெரியுமா?

ஐபோன் மீது ஏற்பட்ட மோகத்தால் சிறுநீரகத்தை விற்ற சீன இளைஞரின் தற்போது அவரது நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது.

பெய்ஜிங்:  ஐபோன் மீது ஏற்பட்ட மோகத்தால் சிறுநீரகத்தை விற்ற சீன இளைஞரின் தற்போது அவரது நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது.

முன்பெல்லாம் ஐபோன் வைத்திருப்பவரைப் பெரிய இடத்து ஆளு என்று கூறுவார்கள்.ஏனென்றால் அந்த அளவுக்கு  ஐபோன் விலை மாடலுக்கு ஏற்றவாறு மாறி கொண்டே இருக்கும். அப்படி 2011 ஆம் ஆண்டு  சீனாவைச் சேர்ந்த 17 இளைஞர் சியாவோ வாங் என்பவர் தன்னுடைய நண்பர்கள் அனைவரும் ஐபோன் 4 வாங்கி விட்டதால் தானும் வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.  ஆனால், அதற்கான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. அப்போது தான் ஆன்லைனில் சிறுநீரகம் விற்பது பற்றிய விளம்பரம் ஒன்று அவரின் கண்களில் தென்பட்டது. சற்றும் யோசிக்காமல், விளம்பரம் கொடுத்திருந்த இடைத்தரகரைத் தொடர்புகொண்டு பேசினார். சட்டத்துக்குப் புறம்பாக சிறுநீரகம் விற்பனை செய்யும் மருத்துவமனை ஒன்றுக்கு சியாவோ அழைத்துச் செல்லப்பட்டு அவரின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. 

iphone

அதன்மூலம் அவருக்குக் கிடைத்த தொகை 3,200 டாலர் பணத்தை  வைத்து உற்சாகமாக ஐபோன் வாங்கினார் சியாவோ. ஆனால், இதன் பிறகு தான் அவருக்கு பிரச்னை ஆரம்பமாகியுள்ளது. அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே அவரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்தது.

china

மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது  ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில் சியாவோவின் இன்னொரு சிறுநீரகத்திலும் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்த தகவல் அதிர்ச்சியைக் கொடுத்தது.  முன்னர் சியாவோவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் முறையாகச் செய்யவில்லை. காயம் சரியாக ஆறாமல் தொற்று ஏற்பட்டு இன்னொரு சிறுநீரகத்துக்கும் பரவியிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட சியாவோ அதிர்ச்சியில் உறைந்து போனார். வேறு வழியில்லாமல் தற்போது தினமும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும், சிகிச்சைக்குச் செலவழிக்கப் பணமில்லாமல் அவரின் குடும்பம் திண்டாடி வருகிறது. ஐபோன் மோகம் ஒரு இளைஞரின் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது என்பதே கசப்பான உண்மை.