ஐபில் போட்டிகளில் விளையாட அனுமதி தாருங்கள்: யுவராஜ் சிங் கடிதம்!

 

ஐபில் போட்டிகளில் விளையாட அனுமதி தாருங்கள்: யுவராஜ் சிங் கடிதம்!

டி20 போட்டிகளில் விளையாட அனுமதிக்கக்கோரி  யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

மும்பை:  டி20 போட்டிகளில் விளையாட அனுமதிக்கக்கோரி  யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  இந்திய கிரிக்கெட் வீரர்  யுவராஜ் சிங்  அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தைக் கண்டு கிரிக்கெட் ரசிர்கர்கள் மட்டுமில்லாது எதிரணி வீரர்களும் பிரமித்துப் போயினர். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அதகளப்படுத்தியவர் யுவராஜ்.

yuvi

இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் அவர் இந்திய அணியிலிருந்து  ஓரங்கட்டப்பட்டார். இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடிய இவருக்கு அங்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். யுவராஜ் சிங் இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா?இல்லையா என்ற சந்தேகம்கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலிருந்து வந்தது.  

yuvaraj

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில்   விளையாட அனுமதி வழங்குமாறு யுவராஜ் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் யுவராஜின் அதிரடி ஆட்டத்தை நாம் ஐபிஎல் போட்டிகளில் காணலாம்.