ஐதரபாத்தில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

 

ஐதரபாத்தில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

இந்த சம்பவம் திங்கள்கிழமை பிற்பகல் ஜகத்கிரிகுட்டாவில் உள்ள ரிக்ஷா புல்லர்ஸ் காலனியில் நடைபெற்றுள்ளது. பலியானவர் சிந்தாலைச் சேர்ந்த லவகுஷா என்ற செர்பத் ஃபயாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தில் 26 வயது ரவுடி ஒருவன் முன்விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி கொல்லப்பட்டான்.

இந்த சம்பவம் திங்கள்கிழமை பிற்பகல் ஜகத்கிரிகுட்டாவில் உள்ள ரிக்ஷா புல்லர்ஸ் காலனியில் நடைபெற்றுள்ளது. பலியானவர் சிந்தாலைச் சேர்ந்த லவகுஷா என்ற செர்பத் ஃபயாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் பிரசாந்த் மற்றும் அவரது கூட்டாளியான நரேஷ் ஆகியோருடன் மது அருந்தும்போது ஃபயாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிரயாத்தை கொலை செய்வேன் என்று பயாஸ் மிரட்டியதாக தெரிகிறது. 
ஃபயாஸிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அஞ்சிய பிரசாந்தும் அவரது கூட்டாளிகளும் ஃபயாசை தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருந்தனர். “மதியம் தனது காதலி வீட்டிலிருந்து வெளியே வந்தபோது பிரசாந்த், நரேஷ் மற்றும் இரண்டு கூட்டாளிகள் ஃபயாஸ் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் ஃபாயஸ் ஓடத் தொடங்கினார். அவரை 4 பேரும் சேர்ந்து ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவித்தபோது ஃபயாஸ் ஒரு பெண்ணுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணுடன் பழகுவதை ஃபயாசின் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. மேலும் ஃபயாசுடன் ரவுடிசம் செய்வதில் போட்டி இருந்ததால் அவரை தீர்த்துக் கட்ட குற்றவாளிகள் முடிவு செய்தனர் என தெரிவித்தனர். ஃபயாஸ் விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. ஃபயாஸ் மற்றும் பிரசாந்த் இருவர் மீதும் ஏற்கனவே கொலை கொள்ளை உள்ளிட்ட கிரிமினல் பதிவுகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்த வருகின்றனர்.