ஐடியா திருட்டு… தி.மு.க-விடமிருந்து பிஷாந்த் கிஷோர் கற்றுக்கொண்டாரா? – ராமதாஸ் நக்கல் ட்வீட்

 

ஐடியா திருட்டு… தி.மு.க-விடமிருந்து பிஷாந்த் கிஷோர் கற்றுக்கொண்டாரா? – ராமதாஸ் நக்கல் ட்வீட்

தன்னுடைய ஐடியாவை பிரஷாந்த் கிஷோர் திருடிவிட்டார் என்று பீகாரில் இளைஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஐடியா திருட்டை பிரஷாந்த் கிஷோர் தி.மு.க-விடமிருந்து கற்றுக் கொண்டாரா என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னுடைய ஐடியாவை பிரஷாந்த் கிஷோர் திருடிவிட்டார் என்று பீகாரில் இளைஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

prashant-kishor-09

பிரஷாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பற்றி டாக்டர் ராமதாஸ் ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “பிகாரில் நல்லாட்சி வழங்குவதற்கான தமது கருத்துருவை பிரசாந்த் கிஷோர் திருடிவிட்டதாக   புகார். வழக்குப் பதிவு : செய்தி – சரி தான்.பிரசாந்த் கிஷோர் தமிழக கூட்டாளிக்கு கற்றுத் தருகிறாரா…தமிழக கூட்டாளியிடம் கற்றுக் கொள்கிறாரா? என்பதே தெரியவில்லையே? என்னவோ நடக்குது… ஒன்னுமே புரியலை” என்று கூறியுள்ளார்.