ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு – கோரிக்கை மாநாடு தொடக்கம்

 

ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு – கோரிக்கை மாநாடு தொடக்கம்

ஈரோடு

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் விவசாயிகள்கூட்டமைப்பு சார்பில் இன்று கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆவரங்காட்டு வலசு பகுதியில் நடைபெற்ற இந்தமாநாட்டில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் காசியண்ணன், திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி, திருப்பூர் எம்.பி. சுப்பராயன், சேலம் எம்.பி. பார்த்திபன், தனியரசு எம்எல்ஏ உட்பட முக்கியமான அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்பைசேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு – கோரிக்கை மாநாடு தொடக்கம்

ஐடிபிஎல் திட்டத்தை சாலை வழியாக செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுதேர்தல் அறிக்கை அறிவிப்பாக அரசியல் கட்சிகள் வெளியிட்டு இந்த பிரச்சினைக்கு முடிவுகாணும் வகையில் இந்த கோரிகைமாநாடு நடைபெற்றது.