ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் இனி மத்திய குற்றப்பிரிவு விசாரணை !

 

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் இனி மத்திய குற்றப்பிரிவு விசாரணை !

ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வந்த இவர் கடந்த 8 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் கொல்லம் எனும் பகுதியைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வந்த இவர் கடந்த 8 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Fathima

இன்று ஐஐடி வளாகத்திற்குச் சென்ற சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், அக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் உட்பட அனைவரிடமும் இந்த சம்பவம் குறித்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஸ்வநாதன், பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அனுபவமுள்ள அதிகாரிகள் கொண்ட குழு இதனை இனிமேல் விசாரிக்கும் என்று தெரிவித்தார்.