ஐஎஸ்எல் கால்பந்து: கோவா-கவுகாத்தி ஆட்டம் டிரா

 

ஐஎஸ்எல் கால்பந்து: கோவா-கவுகாத்தி ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் கோவா-கவுகாத்தி அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது

கவுகாத்தி: ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் கோவா-கவுகாத்தி அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்நிலையில், கோவா-கவுகாத்தி அணிகள் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்தது. இரு அணிகளும் தொடக்கம் முதலே ஈடு கொடுத்து ஆடினார். ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் பெடரிகோ காலெகோ கோல் அடித்தார். அதன்பின்னர், 14-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்த கோவா அணியின் நட்சத்திர வீரர் பெரன் கோராமினோஸ் கோல் அடித்தார்.

இதையடுத்து, ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் கோவா வீரர் பெரன் கோராமினோஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் கவுகாத்தி கேப்டன் பார்த்தோலோம் ஓக்பேச் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் மும்பை சிட்டி-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.