ஏ.டி.எம் கொள்ளையன் கதவு திறக்க தெரியாததால் சிக்கினான்… சீனாவில் காமெடி!

 

ஏ.டி.எம் கொள்ளையன் கதவு திறக்க தெரியாததால் சிக்கினான்… சீனாவில் காமெடி!

சீனாவின் ஹாண்டோங் நகரில் உள்ள ஏ.டி.எம் மையத்துக்குள் ஒருவர் நுழைந்துள்ளார். உள்ளே நுழைந்த சில விநாடிகளில் கதவு மூடிக்கொள்கிறது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் அவர் கதவைத் திறக்க முயல்கிறார். ஆனால், அலாரம் அடிக்கவே திகைத்துப்போய், அங்கிருந்த குப்பை தொட்டி மூடியை எடுத்து ஏ.டி.எம் இயந்திரத்தை அடிக்கிறார். என்ன செய்தாலும் கதவு திறக்கவில்லை.

ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடிக்க வந்த நபர், கதவு திறக்கத் தெரியாததால் மாட்டிய சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சீனாவின் ஹாண்டோங் நகரில் உள்ள ஏ.டி.எம் மையத்துக்குள் ஒருவர் நுழைந்துள்ளார். உள்ளே நுழைந்த சில விநாடிகளில் கதவு மூடிக்கொள்கிறது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் அவர் கதவைத் திறக்க முயல்கிறார். ஆனால், அலாரம் அடிக்கவே திகைத்துப்போய், அங்கிருந்த குப்பை தொட்டி மூடியை எடுத்து ஏ.டி.எம் இயந்திரத்தை அடிக்கிறார். என்ன செய்தாலும் கதவு திறக்கவில்லை.
கடைசியில் ஒருவழியாக கதவைத் திறந்து அவர் வெளியேறியுள்ளார். 
அலாரம் அடித்ததால் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, அந்த நபரைக் கைது செய்தனர். அவர் ஏ.டி.எம்-ல் கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த நபரோ, “பணம் எடுக்கத்தான் வந்தேன், திடீரென்று அலாரம் அடித்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துவிட்டேன்” என்று  கூறியுள்ளார். போலீசாரும் அந்த நபர் அலாரத்தை மட்டுமே உடைத்துள்ளார். ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் எதுவும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்துவிட்டு வெளியேற முடியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.