ஏ.டி.எம்-ஐ திறக்க முயன்று அலாரம் சத்தத்தால் பயந்து ஓடிய திருடன் !

 

ஏ.டி.எம்-ஐ திறக்க முயன்று அலாரம் சத்தத்தால் பயந்து ஓடிய திருடன் !

திண்டிவனம் நேரு வீதியில் பாரத் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் உள்ளது. நேற்று முன் தினம் வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம்மை பூட்டிவிட்டு அந்த சாவியை மறந்து அங்கேயே வைத்து விட்டு சென்றுள்ளனர்.

திண்டிவனம் நேரு வீதியில் பாரத் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் உள்ளது. நேற்று முன் தினம் வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம்மை பூட்டிவிட்டு அந்த சாவியை மறந்து அங்கேயே வைத்து விட்டு சென்றுள்ளனர். மறுநாள், அங்குச் சென்ற நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்த பொது அங்கு சாவி இருந்துள்ளது. அதனை எடுத்துக் கொண்டு அப்போதே ஏ.டி.எம்மை திறக்காமல் சென்றுள்ளார். ஊழியர்கள் வந்து பார்க்கையில் சாவி அங்கே இல்லை. 

atm

சாவியை எடுத்துக் கொண்டு சென்ற நபர், நேற்று இரவு வந்து வங்கியைத் திறக்க முயற்சி செய்துள்ளார். வங்கியின் பூட்டை தவறாக யாரேனும் திறந்தால் அதில் அலாரம் அடிப்பது போன்று பொருத்தப்பட்டுள்ளது. அந்த திருடன் பூட்டை திறக்க முயற்சி செய்த போது அலாரம் அடித்துள்ளது.

thierdan

அந்த சத்தத்தைக் கேட்டுப் பயந்த திருடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். வங்கியின் அருகே இருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை வங்கி ஊழியர்கள் சோதித்துப் பார்க்கையில் அந்த திருடன், பூட்டை திறக்க முயற்சித்து பயந்து ஓடியது தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த திருடன் அப்பகுதியைச் சேர்ந்த சுகுந்தன் என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சுகுந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.