ஏ.ஜி.எஸ் நிறுவன அலுவலகங்களில் ஐ.டி ரெய்டு…நடிகர் விஜய்யிடமும் விசாரணை

 

ஏ.ஜி.எஸ் நிறுவன அலுவலகங்களில் ஐ.டி ரெய்டு…நடிகர் விஜய்யிடமும் விசாரணை

‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவன அலுவலகங்களில் வருமானவரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை: ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவன அலுவலகங்களில் வருமானவரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

பிரபல ஏ.ஜி.எஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் சந்தோஷ் சுப்பிரமணியம், மதராசபட்டினம், மாற்றான், அனேகன், தனி ஒருவன், கவண் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது. மேலும் நான்கு திரையரங்குகளையும் சென்னையில் நிர்வகித்து வருகின்றனர். சினிமா விநியோக தொழிலிலும் ஈடுப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ‘பிகில்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த இந்தப் படம் ரூ.300 கோடி வசூல் குவித்ததாக அண்மையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டிவிட்டரில் பதிவிட்டார்.

vijay

இந்த நிலையில், சென்னையில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதுதவிர, நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடமும் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.