ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பை மறுத்த நடிகர் விஜய்?

 

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பை மறுத்த நடிகர் விஜய்?

‘சர்கார்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட கிடைத்த வாய்ப்பை நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக ஏ.ஆர்.ரகுமானே தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: ’சர்கார்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட கிடைத்த வாய்ப்பை நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக ஏ.ஆர்.ரகுமானே தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ’சர்கார்’ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்களின் ஆரவத்திற்கு நடுவே ‘சர்கார்’ இசை கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

arrahman

’தலைவா’ படத்தில் ’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலில் தொடங்கி ‘பைரவா’ படத்தில் ‘பாப்பா பாப்பா’ பாடல் வரை நடிகர் விஜய் தனது படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால், ’மெர்சல்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களை ஏமாற்றினார்.

இதைத் தொடர்ந்து தற்போது ‘சர்கார்’ படத்தில் விஜய் பாடுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், ‘சர்கார்’ பாடல்கள் நேற்று வெளியானது. ஆனால் இந்த படத்திலும் விஜய் பாடவில்லை. இது குறித்து பேசிய ஏ.ஆர்.ரகுமான், ‘சர்கார்’ படத்தில் ஒரு ஹை பிச் பாடலை பாட விஜய்யை அணுகினோம். ஹை பிச்சா நான் உங்க ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு வருவதாக கூறினார். ஆனால் அதற்குள் பாடலே ரிலீசாகிவிட்டது என்றார்.

thalapathyvijay

பின்னர் இதற்கு பதிலளித்த விஜய், மறுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை. ரகுமான் சார் நம்மல பாட்றீங்களான்னு கேட்டதே பெஇர்ய விஷயம். அவர் ஸ்டூடியோ வரை போய் அசிங்கப்பட வேண்டாமேன்னு தான் நான் போகல.. என்று கலகலப்பாக விஜய் பதிலளித்தார்.

பொதுவாக அனைத்து பாடகர்களுக்குமே ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், விஜய் அப்படி தானே தேடி வந்த வாய்ப்பை மறுத்திருப்பது மீண்டும் அவரது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.