ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் திரிஷா! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் திரிஷா! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகை திரிஷா நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. 

சென்னை: நடிகை திரிஷா நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. 

தமிழ் சினிமாவின் பல காலங்களாக ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த நடிகை என்றால் அவர் திரிஷா மட்டுமே. கடந்த ஆண்டு இறுதியில் இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. 

trisha

அப்படத்தையடுத்து இவருக்கு பட வாய்ப்பு குவிகிறதாம். இந்நிலையில் தற்போது எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய இயக்குநர் எம்.சரவணன் இயக்கவுள்ள புதிய படத்தில், கதாநாயகியாக திரிஷா கமிட் ஆகியுள்ளார். ராங்கி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதையை  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். 

இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். மேலும் ராங்கி பட பற்றிய மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

இதையும் படிங்க: பொது இடத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றை தடவிய சுரேஷ் கோபி! வைரலாகும் வீடியோ!