ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம் ஆணை

 

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம் ஆணை

‘சர்கார்’ திரைப்படம் விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ‘சர்கார்’ திரைப்படம் விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரமாக தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் டிச.14ம் தேதி வரை இயக்குநர் முருகதாஸை கைது செய்யக் கூடாது என ஆணை பிறப்பித்துள்ளது.

சர்கார் திரைப்படத்தின் தமிழக அரசின் முத்திரை பதித்த இலவச பொருட்களை தீயில் போட்டு எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று சர்ச்சையை கிளப்பின. தமிழகம் முழுவதும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி போராட்டங்கள் வெடித்ததையடுத்து, குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டு திரைப்படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அரசின் கொள்கையை விமர்சித்ததாக சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.