ஏழுமலையானை தரிசிக்க சென்ற முதலமைச்சர்!

 

ஏழுமலையானை தரிசிக்க சென்ற முதலமைச்சர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதிக்கு சென்றுள்ளார். 

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதிக்கு சென்றுள்ளார். 

திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகை பகுதியில் உள்ள ஓர் விடுதியில் தங்கினார். தேவஸ்தான துணைச் செயல் அலுவலர் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி. திருமலையில் இரவு தங்கியிருந்து.

நாளை காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்ய உள்ளார்.