ஏற்கனவே ஓவரா இருக்கு! இனி ஆட்டோக்களுக்கு அனுமதி கிடையாது – கடலூர் ஆட்சியர் அதிரடி
Feb 12, 2020, 20:20 IST1581519024000
கடலூரில் அதிக ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு புதிய அனுமதி கிடையாது கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் அதிக ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு புதிய அனுமதி கிடையாது கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் அதிகமான எண்ணிக்கையில் ஆட்டோ பர்மிட் வழங்கப்பட்டுவிட்ட காரணத்தால் இந்த ஆண்டு இறுதி வரை புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி கிடையாது என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். மேலும் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றினாலும் மாணவ-மாணவிகளை ஏற்றினாலும் ஆட்டோவின் பர்மிட் ரத்து செய்யப்படுவதுடன், ஆட்டோ ஓட்டுனர்களின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.