ஏர் கூலரில் காற்று வாங்கிக்கொண்டே ஜாலியாக டிவி பார்த்த பாம்பு: அதிர்ச்சியில் உறைந்த கடலூர்வாசிகள்!

 

ஏர் கூலரில்  காற்று  வாங்கிக்கொண்டே ஜாலியாக டிவி பார்த்த பாம்பு: அதிர்ச்சியில் உறைந்த கடலூர்வாசிகள்!

கட்டிலில் பாம்பு ஜாலியாக படுத்திருந்ததைக் கண்ட பிச்சாண்டி குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கடலூர் : நல்லபாம்பு ஒன்று, கட்டிலில் படுத்துக்கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மற்ற உயிரினங்களுக்கும் இதே நிலை தான். அந்த  வகையில், கடலூர் சோனாங்குப்பத்தில்  வசித்து வருபவர் பிச்சாண்டி.  இவரது வீட்டில்  புனித நல்லபாம்பு ஒன்று வீட்டிலிருந்த ஏர் கூலர் பக்கத்தில் கட்டிலின் மேல் படுத்து கொண்டு, டிவியை  பார்த்த படி படுத்திருந்தது. 

snake

கட்டிலில் பாம்பு ஜாலியாக படுத்திருந்ததைக் கண்ட பிச்சாண்டி குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.  இது குறித்து  வனவிலங்கு ஆர்வலர் ஒருவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப் பகுதியில் விட்டுள்ளார்.

snake

இது குறித்துக் கூறியுள்ள பிச்சாண்டி குடும்பத்தினர், பாம்பு வனவிலங்கு ஆர்வலர் வரும்வரை எதற்கும் பயப்படாமல், டிவி பார்த்தபடி படுத்திருந்தது. இந்த சம்பவத்தை எங்களால் மறக்கவே முடியாது’ என்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.