ஏரியில் மோடி அலையை உருவாக்க முயற்சி: பிரதமரை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வீடியோ

 

ஏரியில் மோடி அலையை உருவாக்க முயற்சி: பிரதமரை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வீடியோ

டால் ஏரியில் ஆளே இல்லாத இடத்தைப் பார்த்து பிரதமர் மோடி கையசைத்த காட்சி வைரலாகி இருக்கிறது. இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஸ்ரீநகர்: டால் ஏரியில் ஆளே இல்லாத இடத்தைப் பார்த்து பிரதமர் மோடி கையசைத்த காட்சி வைரலாகி இருக்கிறது. இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லெஹ் ஆகிய இடங்களுக்கு சில முன்னேற்ற திட்டங்களை துவங்கி வைக்க பயணம் மேற்கொண்டார். அப்போது ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற டால் ஏரிக்கு சென்றார். அவர் ஏரிக்கு சென்ற காணொளியை பிஜேபி தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

இந்த வீடியோவில் மோடி, தன்னை மக்கள் பார்வையிடுவது போல் கையசைத்து காட்டுகிறார். ஆனால் அந்தப் பகுதியில் ஆட்கள் யாருமில்லை. இதற்கு ஸ்ரீநகரை சேர்ந்த் யூசூப், டால் ஏரி மிகப் பெரியது. அதன் கரையில் உள்ள மக்களை பார்க்க முடியாது. மேலும், டால் ஏரிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு அதன் பாதைகள் மூடப்பட்டிருக்கிறது. அங்கே செக்யூரிட்டியை தவிர வேறு யாருமில்லை என பதில் அளித்துள்ளார். 

ஏரியில் மோடி அலையை உருவாக்க முயற்சி செய்கிறார் எனவும் பலர் கலாய்த்து வருகின்றனர்.