ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு : மோடி

 

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு : மோடி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மோடி இன்று உரையாடுவதாக இருந்த நிலையில் 
 இன்று 4 ஆவது முறையாக நாட்டு மக்கள் மத்தியில் பேசினார். 

அப்போது, “கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். கொரோனா இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை தளர்வுக்கு பிறகு கொரோனா  தொற்று அதிகமானால் மீண்டும் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கபடும்.  கொரோனாவை கட்டுபடுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாகியுள்ளது. வெளியில் வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முக கவசங்களை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்றார். 

21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு அதாவது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.