ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி துவங்குகிறது. 20 மாநிலங்களைச் சேர்ந்த 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.