ஏன் கடவுளின் சிலையை கருங்கல்லில் வடிக்கிறார்கள்?

 

ஏன் கடவுளின் சிலையை கருங்கல்லில் வடிக்கிறார்கள்?

எல்லா கோயில்களிலும், உற்சவர் சிலையை உலோகத்தால் வடித்தாலும், மூலவர் சிலையைக் கருங்கல்லில் தான் வடித்திருப்பார்கள். உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. கருங்கல்லிற்கு எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு. கருங்கல்லில் நீர், நிலம்,நெருப்பு, காற்று, ஆகாயம் என்று பஞ்ச பூதங்களின் தன்மையும் அடங்கியுள்ளது. வேறு எந்த உலோகத்திலும் இந்த தன்மை கிடையாது. 

எல்லா கோயில்களிலும், உற்சவர் சிலையை உலோகத்தால் வடித்தாலும், மூலவர் சிலையைக் கருங்கல்லில் தான் வடித்திருப்பார்கள். உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. கருங்கல்லிற்கு எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு. கருங்கல்லில் நீர், நிலம்,நெருப்பு, காற்று, ஆகாயம் என்று பஞ்ச பூதங்களின் தன்மையும் அடங்கியுள்ளது. வேறு எந்த உலோகத்திலும் இந்த தன்மை கிடையாது. 

god

கல்லில் நீர் உள்ளது.  தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலமும் கல்லில் உள்ளது. எனவே தான் கற்களிலும் செடி கொடிகள் வளர்கின்றன.
கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி கிளம்புவதே சான்று.
கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரையால் உயிர் வாழ முடிகிறது.
ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்குள்ளே ஒடுக்கி, பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட’கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை கேட்கலாம்.

god

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும்,  வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி தெய்வ உருவங்களை கருங்கல்லில் பிரதிஷ்டைச் செய்து, தினமும் முறையாக பூஜைகள் செய்து வருகின்ற கோவில்களுக்கு நாம் சென்று தரிசித்தால், நமது உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக உணரலாம்.
அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.