ஏன்டா ஐஸ்கிரீம் வாங்கித் தரல?.. காதலனை கொன்ற காதலி

 

ஏன்டா ஐஸ்கிரீம் வாங்கித் தரல?.. காதலனை கொன்ற காதலி

ஐஸ்கிரீம் கேட்ட காதலிக்கு, அதை வாங்கித் தர மறுத்து உடல் எடை குறித்தும் கிண்டல் அடித்ததால் ஆத்திரமடைந்த காதலி அதே இடத்திலேயே குத்திக் கொன்ற சம்பவம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டின் ஹெனான் மாகாணத்திற்கு உட்பட்ட ஜூமடியன் நகரில் உள்ள கடைத் தெருவின் வழியே ஒரு இளம் காதல் ஜோடி நடந்து சென்றுள்ளனர். அங்கு செல்லும் வழியில் ஐஸ்கிரீம் கடையை பார்த்ததும் காதலி தனது காதலனிடம் அதை வாங்கித் தருமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஐஸ்கிரீம் கேட்ட காதலிக்கு, அதை வாங்கித் தர மறுத்து உடல் எடை குறித்தும் கிண்டல் அடித்ததால் ஆத்திரமடைந்த காதலி அதே இடத்திலேயே குத்திக் கொன்ற சம்பவம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டின் ஹெனான் மாகாணத்திற்கு உட்பட்ட ஜூமடியன் நகரில் உள்ள கடைத் தெருவின் வழியே ஒரு இளம் காதல் ஜோடி நடந்து சென்றுள்ளனர். அங்கு செல்லும் வழியில் ஐஸ்கிரீம் கடையை பார்த்ததும் காதலி தனது காதலனிடம் அதை வாங்கித் தருமாறு வற்புறுத்தியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த காதலன், நீ ஏற்கனவே நான்கு பெருத்து குண்டாக இருக்கிறாய். இதற்கும் மேல் ஐஸ்கிரீம் சாப்பிட்டு குண்டாக போகிறாயா? எனக் கோபமாக கூறிவிட்டு ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்துள்ளார். 

திடீரென தனது காதலன் இப்படி கூறியதை கேட்டு மனமுடைந்த காதலி, அதே இடத்தில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து நடந்து சென்றுவிட்டனர். 

ஆனால், இச்சம்பவம் தொடர்ந்து காதலியின் மனதை உறுத்திக் கொண்டே இருக்க, அருகில் உள்ள கடைக்கு சென்று கத்திரிக்கோல் ஒன்றை வாங்கி வந்துள்ளார்.  இப்போ எதற்கு கத்திரிக்கோல்? என காதலன் கேட்டுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல் காதலனின் வயிற்றிலேயே காதலி 4 முறை வேகமாக குத்தியிருக்கிறார். 

இதனால் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் காதலன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த சுற்றி இருந்த மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு மருத்துவமனைக்கும் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதிக இரத்தம் வெளியானதால் செல்லும் வழியிலேயே காதலன் உயிரிழந்திருக்கிறார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வேகமாக மக்கள் கூடியதால், காதலி அந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். அதற்குள் போலீசார் விரைந்து வந்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.