“ஏண்டி என்ன விட்டுட்டு இன்னொருத்தன் கூட சுத்தறியா?”காதலி கைமாறியதால் காதலன் கொலைகாரனாக மாறினார் ..
டெல்லியில் 25 வயதான சமிரிதா மற்றும் அவரது தாயார் சுமிதா மேரி வசுந்தரா என்க்ளேவில் உள்ள அவர்களது பிளாட்டில் வசித்து வந்தனர். சமிரிதாவின் தாய் ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்தார், அதே போல் சம்ரிதா தலைநகரில் 5 நட்சத்திர ஹோட்டலில் இன்டர்னெட்டாக பணிபுரிந்தார்.
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் தனது முன்னாள் காதலன் விக்ராந்த் நகர் என்பவரால் கொலை செய்யப்பட்டார். விக்ராந்து அவரது நண்பருடன் சேர்ந்து அந்தப்பெண்ணின் தாயையும் குத்திக் கொலை செய்தார்.
டெல்லியில் 25 வயதான சமிரிதா மற்றும் அவரது தாயார் சுமிதா மேரி வசுந்தரா என்க்ளேவில் உள்ள அவர்களது பிளாட்டில் வசித்து வந்தனர். சமிரிதாவின் தாய் ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்தார், அதே போல் சம்ரிதா தலைநகரில் 5 நட்சத்திர ஹோட்டலில் இன்டர்னெட்டாக பணிபுரிந்தார்.
சமிர்தா, விக்ராந்துடன் காதல் முறிந்த போதிலும், சமிர்தா வேறொரு நபரை காதலித்ததால் விக்ராந்த் கோபமடைந்தார். அதனால் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது தாயையும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். மறுநாள் வீட்டு உதவியாளர் கதவை தட்டி யாரும் கதவைத் திறக்காததால் திங்கள்கிழமை காலை இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர், பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்து போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டு வீட்டை உடைத்து இரண்டு உடல்களும் மீட்கப்பட்டது
விக்ராந்த் ஜெய்ப்பூர் செல்லும் பேருந்தில் தப்பி ஓட முயன்றபோது ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரயாக் என்ற அவரது நண்பர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.