“ஏண்டா எந்நேரமும் அந்த பொண்ணை டார்ச்சர் பண்றே ” பஞ்சாயத்துக்கு போனவரின் உடம்பு பஞ்சரானது..

 

“ஏண்டா எந்நேரமும் அந்த பொண்ணை டார்ச்சர் பண்றே ” பஞ்சாயத்துக்கு போனவரின் உடம்பு பஞ்சரானது..

பெங்களூருவில்  மராத்தஹள்ளி அருகே கடுபீசனஹள்ளியில் கபீர் என்ற நபர், அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தனியாக இருந்த பெண்ணின் வீட்டை தினமும் நள்ளிரவில் கதவை தட்டி துன்புறுத்துவார் .

பக்கத்து வீட்டு பெண்ணின் வீட்டு கதவை தட்டிய வாலிபரை தட்டிக்கேட்டவரை கத்தியால் குத்திய நபர் போலீசால் கைது செய்யப்பட்டார். 
பெங்களூருவில் மராத்தஹள்ளி அருகே கடுபீசனஹள்ளியில் கபீர் என்ற நபர், அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தனியாக இருந்த பெண்ணின் வீட்டை தினமும் நள்ளிரவில் கதவை தட்டி துன்புறுத்துவார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மேலும் சில பெண்களோடு சேர்ந்து பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. பிறகு அருகில் வசிக்கும் ஹுசைன் என்ற அஸ்ஸாமை சேர்ந்தவரிடம் அவர் புகார் கூறியுள்ளார்.

புதன்கிழமையன்று நள்ளிரவில் மீண்டும் கபீர் அந்த பெண்ணின் வீட்டு கதவை தட்டியுள்ளார் .இதனால் கடுப்பான பக்கத்து வீட்டு ஹுசைன் எழுந்து போய் அவரிடம் இவ்வாறு செய்யவேண்டாம் என்று மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ,கபீர் ஒரு கத்தியை எடுத்து ஹுசைனை பலமுறை குத்தியுள்ளார் .இதில் பலத்த காயமடைந்த ஹுசைன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்துகின்றனர். 
 .