ஏடிஎம் மிஷினை மொத்தமாக பெயர்த்துக் கொண்டு போன கொள்ளையர்கள்: அதிர்ச்சியில் போலீசார்!?

 

ஏடிஎம் மிஷினை மொத்தமாக பெயர்த்துக்  கொண்டு போன கொள்ளையர்கள்: அதிர்ச்சியில் போலீசார்!?

 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.  இயந்திரத்தைப் பணத்துடன் கொள்ளையர்கள்  கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புனே: ஸ்டேட் பாங்க்  ஏ.டி.எம்.  இயந்திரத்தைப் பணத்துடன் கொள்ளையர்கள்  கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

atm

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் யவாத் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ஏ.டி.எம்.  இயந்திரத்தைப் பணத்துடன் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

money

இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மர்ம நபர்கள் சிலர்  நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணி அளவில் ஏடிஎம் மையத்திற்கு வந்து ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடித்துள்ளனர். குறிப்பாக ஏடிஎம் இயந்திரத்தில் கயிறைக்கட்டி வெளியிலிருந்த காரை  ஸ்டார்ட் செய்து இயந்திரத்தை அப்படியே பியர்த்து எடுத்துள்ளனர். கொள்ளைபோன ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக ஏடிஎம் இயந்திரங்களை சுவற்றில் பதித்தாற்போல அமைக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் வரும் செப்டம்பருக்குள்  அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.