ஏசியில் கேஸ் கசித்து தீ பிடித்த கார்: நொடிப் பொழுதில் கருகிய ஓட்டுநர்!
Oct 26, 2018, 13:32 IST1540540962000
திடீரென ஏற்பட்ட கேஸ் கசிவினால் நின்று கொண்டிருந்த கார் தீ பற்றி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்: திடீரென ஏற்பட்ட கேஸ் கசிவினால் நின்று கொண்டிருந்த கார் தீ பற்றி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அசதியின் காரணமாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு, ஏசி போட்டபடி ஓட்டுநர் தூங்கியுள்ளார்.
அப்போது ஏசியில் இருந்து திடீரென ஏற்பட்ட கேஸ் கசிவினால் கார் தீ பிடித்து எறியத் தொடங்கியுள்ளது. இதில் காரில் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.