எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார்; – சிவகங்கை காங்கிரஸ் அதிரடி

 

எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார்; – சிவகங்கை காங்கிரஸ் அதிரடி

நடிகர் எஸ்.வி.சேகர் ட்விட்டரில் அவ்வப்போது அவதூறான கருத்துக்களைக் கூறுவது உண்டு. பெண் பத்திரிகையாளர் பற்றி அவர் கூறிய கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், போலீசார் அவரை கைது செய்யவில்லை. 

சமூக ஊடக பக்கங்களில் தொடர்ந்து அவதூறான கருத்துக்களைக் கூறி வருவதாக நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் எஸ்.வி.சேகர் ட்விட்டரில் அவ்வப்போது அவதூறான கருத்துக்களைக் கூறுவது உண்டு. பெண் பத்திரிகையாளர் பற்றி அவர் கூறிய கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், போலீசார் அவரை கைது செய்யவில்லை. 
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபாலை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர்.