எஸ்.வி.சேகருக்கு மக்கள் நீதிமய்ய ஆதிதிராவிடர் நல அணி கண்டனம் !

 

எஸ்.வி.சேகருக்கு மக்கள் நீதிமய்ய ஆதிதிராவிடர் நல அணி கண்டனம் !

மக்கள் நீதி மய்யம் குறித்து விமர்சித்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 
மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் ஆதி திராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் பூவை ஜெகதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாதி சமயமற்ற வர்க்க பேதமற்ற, மனிதனை மனிதனாக பார்க்கும் முற்போக்கு சிந்தனையாளர் கமல்ஹாசன் அவர்கள் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லை.

மக்கள் நீதி மய்யம் குறித்து விமர்சித்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் ஆதி திராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் பூவை ஜெகதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாதி சமயமற்ற வர்க்க பேதமற்ற, மனிதனை மனிதனாக பார்க்கும் முற்போக்கு சிந்தனையாளர் கமல்ஹாசன் அவர்கள் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் நல அணி மாநில செயலாளராக என்னை கமல்ஹாசன் அவர்கள் நியமித்த செய்தியினை பற்றி விமர்சனமென்ற பெயரில் நம்மவர் சாதிய சிந்தனையுள்ளவர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்றதை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.

nammavr

சாதிகளுக்கு ஆதரவு என்பது வேறு, காலகாலமாக ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தை கைதூக்கிவிட்டு, அந்த சமூகத்தின் மீது அக்கறை செலுத்துவது என்பது வேறு. இப்படிபட்ட அக்கறை காரணமாகத்தான் அரசே அதற்கான துறைகளை உருவாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற அமைப்புகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய இடஓதுக்கீட்டை அமல்படுத்துகிறது

poovai

இதுவரை அமல்படுத்திய இட இடஓதுக்கீட்டில் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியவில்லை இன்னும் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இடஒதுக்கீடு சலுகையை மேலும் பத்தாண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மத்திய அரசை நிர்வகிப்பது நீங்கள் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிதான் என்பது தாங்கள் அறிந்ததே. நீங்கள் எங்கள் தலைவரை பார்த்து அவருக்கு சாதிய சிந்தனை இருக்கிறது என்று சொல்லும் கூற்று உண்மையென்றால் அந்த சிந்தனை பாரதிய ஜனதாவிற்கும் இருக்கிறது என்று அர்த்தமாகிறது. எனவே, நீங்கள் முதலில் சீர்திருத்தவேண்டியது நீங்கள் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியைதான்.

sekar

அப்படியல்லாமல் உங்கள் விரல் கமல்ஹாசன் அவர்களை மட்டும் நோக்கி நீளுமானால், அது நீங்கள் கமல்ஹாசன் அவர்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியையும், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மீது கொண்ட குரோத மனப்பான்மையையுமே காட்டும். எங்கள் தலைவரின் நண்பரே, நீங்கள் நண்பராக இருக்க வேண்டாம். குறைந்தபட்சம் நல்லவராக இருக்கப்பாருங்கள்.
என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.