எஸ்.பி.ஐ வங்கியில் 12 கிலோ தங்க நகைகள், ரூ.19 லட்சம் ரொக்கம் கொள்ளை !

 

எஸ்.பி.ஐ வங்கியில் 12 கிலோ தங்க நகைகள், ரூ.19 லட்சம் ரொக்கம் கொள்ளை !

அந்த வங்கியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக் கிழமை) வங்கியின்  உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வங்கியின் சுவர் ஏறிக் குதித்து வங்கி அருகே சென்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக் கிழமை) வங்கியின்  உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வங்கியின் சுவர் ஏறிக் குதித்து வங்கி அருகே சென்றுள்ளனர். அதனையடுத்து வங்கியின் உள்ளே செல்வதற்காக ஜன்னல் கம்பியை உடைத்து, உள்ளே சென்று நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர்கள் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்துள்ளனர். 

tn

நேற்று காலை வழக்கம் போல பணிக்குத் திரும்பிய வங்கி ஊழியர்கள் வங்கி ஜன்னல் உடைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்க நகைகளும், 19 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், போலீசாருக்கு வங்கி அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், உடைக்கப்படாமல் எஞ்சியிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வங்கியில் நகைகளை வைத்திருந்த மக்கள் வங்கிக்கு திரண்டதால் அங்குப் பரபரப்பு நிலவியது. வங்கியில் கொள்ளை அடித்துச் சென்ற நபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.