எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை: உச்ச நீதிமன்றம்

 

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை: உச்ச நீதிமன்றம்

அரசு பணி உயர்வில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்ற தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

டெல்லி: அரசு பணி உயர்வில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்ற தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதனையடுத்து, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான தரவுகளை வழங்க வேண்டும் எனவும், அரசு பணியில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிப்பட்டது.

இந்த உத்தரவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஒத்திவைத்தது. இதையடுத்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றவேண்டியதில்லை என உத்தரவிட்டுள்ளது.