எஸ்.ஐ வில்சன் கொலைக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது !

 

எஸ்.ஐ வில்சன் கொலைக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது !

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே அவரை சுட்டுக் கொன்ற நபர்களின் புகைப்படமும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம், அப்துல் சமீம், தஃவ்பீக் என்ற இரண்டு பேர் தான் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. 

ttn

இந்த கொலைக்குச் சம்பந்தமான நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று பெங்களூரில்  வில்சனை சுட்டுக் கொல்ல துப்பாக்கி கொடுத்த இஜாஸ் பாஷா என்பவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இவர் 4 துப்பாக்கிகளை மும்பையில் வாங்கியதாகத் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த 4 துப்பாக்கிகளில், 2 துப்பாக்கிகளை இஜாஸ் பாஷா , அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக்-இடம் கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.