எஸ்பிஐ வங்கி அதிரடி சலுகை! குவியும் வாடிக்கையாளர்கள்!

 

எஸ்பிஐ வங்கி அதிரடி சலுகை! குவியும் வாடிக்கையாளர்கள்!

எங்க வங்கியில் உங்க பணத்தைப் போடுங்க என்று வீடு வீடாக சென்று வாடிக்கையாளர்களை வங்கிகள் கவர்ந்து பிரச்சாரம் செய்த காலம் ஒன்று இருந்தது. தனியார் வங்கிகள் தலையெடுக்க ஆரம்பித்த பின், இந்த போக்கில் மந்தம் ஏற்பட்டு சொகுசு ஏஸி அறை, இளமையான அதிகாரிகள், நுனிநாக்கில் ஆங்கிலம், விஸ்தாரமான வரவேற்பறை, நிறைய ஏடிஎம் வசதி என்று ஆசைப்பட்டு பலரும் தனியார் வங்கிகளை நோக்கிப் படையெடுக்க துவங்கினார்கள்.

எங்க வங்கியில் உங்க பணத்தைப் போடுங்க என்று வீடு வீடாக சென்று வாடிக்கையாளர்களை வங்கிகள் கவர்ந்து பிரச்சாரம் செய்த காலம் ஒன்று இருந்தது. தனியார் வங்கிகள் தலையெடுக்க ஆரம்பித்த பின், இந்த போக்கில் மந்தம் ஏற்பட்டு சொகுசு ஏஸி அறை, இளமையான அதிகாரிகள், நுனிநாக்கில் ஆங்கிலம், விஸ்தாரமான வரவேற்பறை, நிறைய ஏடிஎம் வசதி என்று ஆசைப்பட்டு பலரும் தனியார் வங்கிகளை நோக்கிப் படையெடுக்க துவங்கினார்கள். இதில், ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் எல்லாம் வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடிக்காத குறை தான்.  ஆரம்பத்தில் ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தி காசு போடுங்க என்று ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் மெனக்கெட்டு சொல்லி வந்த ஐசிஐசிஐ வங்கி, இப்போதெல்லாம் இயந்திரத்தில் உங்க கணக்கில் பணம் போட்டாலே அதற்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து வாடிக்கையாளர்களைத் தலைத்தெறிக்க ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.

sbi

ஏடிஎம் சேவை தருவதில் எஸ்பிஐ வங்கி இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டு வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதுவரையில் எஸ்பிஐ ஏடிஎம்மில் அதிகப்பட்சமாக நாள் ஒன்றுக்கு 3முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். அதே போல் 20 ஆயிரம் வரை மட்டுமே ஒரு ஏடிஎம் கார்டில் இருந்து எடுக்க முடியும். மற்ற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தினால் அதற்கு தனி சார்ஜ். மாதத்திற்கு 3 முறை இலவச பணப்பரிவர்த்தனை தீர்ந்த பின்பு அதற்கு தனி கட்டணம் என ஏகப்பட்ட விதிமுறைகள் இருந்தன. ஆனால் இனி எஸ்பிஐயில் கணக்கு வைத்திருப்பவர்கள் 25 ஆயிரம் ரூபாய் குறைவாக மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம். ரூ.25 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40 முறை ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். 1 லட்சம் அல்லது அதற்கு மேலே மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் அன்லிமிடெட்டாக ஏடிஎம் சேவையை பெறலாம் என்று எஸ்பிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.