எவனுக்கு எந்த பிரச்னைனாலும் கவனத்த திசைத்திருப்ப என்ன தான் மாட்டி விடுறானுங்க… சீக்கிரம் வரேன் ! நித்தியானந்தாவின் புதிய வீடியோ

 

எவனுக்கு எந்த பிரச்னைனாலும் கவனத்த திசைத்திருப்ப என்ன தான் மாட்டி விடுறானுங்க… சீக்கிரம் வரேன் ! நித்தியானந்தாவின் புதிய வீடியோ

தான் ஏன் தமிழிலில் பேசுவதில்லை என்பதற்கு தலைமறைவாகியுள்ள நித்யானந்தா புதிய வீடியோ ஒன்று வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். 

நித்தியானந்தா

அந்த வீடியோவில், “நான் ஏன் தமிழில் பேசுவதில்லை தெரியுமா? தமிழில் வாய் திறந்தாலே தகராறு பன்றானுங்க… எதையாவது நான் சொல்லி வச்சிடுறேன்.. இவனுங்களுக்கு தமிழும் புரிய மாட்டுங்குது. புரியலனா.. சும்மாவும் இருக்க மாட்றானுங்க! மூல லிங்கத்துக்கும் மூலவர் லிங்கத்துக்கும் வித்தியாச தெரிய மாட்டிங்குது. நான் எதையாவது சொல்ல அவர்கள் எதையாவது புரிஞ்சிக்கிட்டு கேஸ் ஃபைல் பண்ணிடுறாங்க… இதுக்கு ஜாமின் வாங்க ஓடுறதுக்கே நேரம் சரியா இருக்கு…  அதனால தான் நான் தமிழில் பேசுவதே கிடையாது.

சீக்கிரம் வந்து விடுகிறேன். இன்னொன்று தமிழ்நாட்டுல எவனுக்காவது எந்த பிரச்னைனாலும் சரி மக்களின் கவனத்தை திசைத்திருப்ப நித்தியானந்தா ஒருவரை தான் தேடுகின்றனர்” என பேசியுள்ளார்.