எழும்பூர் – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து!

 

எழும்பூர் – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து!

தண்டவாளப் பராமரிப்புக்காக, ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

சென்னையில் எழும்பூர் – தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக, நாளையும், வரும் 22 ஆம் தேதியும் பகல் நேர மின்சார ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.

train

சென்னை மாநகர மக்களின் போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் தண்டவாளப் பராமரிப்புக்காக, ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளையும், அடுத்த ஞாயிற்றுக்கிழமையான 22 ஆம் தேதியும் காலை 11.15 மணி முதல் பிற்பகல்‌ 3.15 மணி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு மணி நேரத்தில் வழக்கமா‌ இயக்கப்படும் 28 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

train

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, காஞ்சிபுரம் – அரக்கோணம் இடையிலான மின்சார ரயில் சேவைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க, 5 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் தெற்‌கு ரயில்வே அறிவித்துள்ளது.