எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான்… இரண்டு பாக். ராணுவ வீரர்களை கொன்ற இந்தியா!

 

எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான்… இரண்டு பாக். ராணுவ வீரர்களை கொன்ற இந்தியா!

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா அளித்த பதிலடியில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

kashmir

காஷ்மீரின் ஊரி செக்டார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய நிலைகள் மீது நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ சுபேதார் ஒருவர் உயிரிழந்தார்.

army

இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் நிலைகள் மீது சிறு பீரங்கி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தானின் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேவா பகுதியில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது.