எல்லையில் அத்து மீறிய பாகிஸ்தான் – ராணுவ வீரர் பலி

 

எல்லையில் அத்து மீறிய பாகிஸ்தான் – ராணுவ வீரர் பலி

எல்லையில் அத்து மீறிய பாகிஸ்தான் ராணுவதிற்கு, இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்திய ராணுவம்

புல்வாமா தாக்குதல் 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே சமீப காலமாக பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் அது எல்லையிலும் எதிரொலித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 14 – ஆம் தேதி புல்வாமா எனும் இடத்தில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 – க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அதற்கு பதிலடியாக 22- ஆம் தேதி பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் நுழைந்து அந்த தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை தாக்கியது. 

இந்திய ராணுவம்

எல்லை மீறிய ராணுவம் 

இந்நிலையில், ஏற்கனவே இருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை 5.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது. சுந்தெர்பெனி செக்டாரில் நடத்தப்பட்ட இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. 

பாகிஸ்தானின் அத்துமீறிய இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.