எல்லைமீறிய கொழுந்தன், புகார் செய்த பெண்ணையே பழிதீர்த்த பஞ்சாயத்தார்!

 

எல்லைமீறிய கொழுந்தன், புகார் செய்த பெண்ணையே பழிதீர்த்த பஞ்சாயத்தார்!

கணவனிடம் சொன்னால், சகோதர பாசத்தில் தன்னை நம்பாமல் போவது மட்டுமல்லாமல், தன்மீதே சந்தேகம் கொள்ள்வைத்துவிடும் என்பதால், கணவர்பக்க உறவின பெண் ஒருவரிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்கிறார். பெண்ணுக்கு எதிரி பெண்ணே என்பதுபோல, அந்த உறவுக்காரப் பெண் இட்டுகட்டி தட்டை திருப்பிப்போட்டுவிடுகிறார் ஊராரிடம்.

ஜார்க்கண்ட் மாநிலம், கோதர்மா மாவட்டத்தில் வசிக்கும் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு அவருடைய கொழுந்தனால் இம்சை. கணவர் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து அவரிடம் அத்துமீறுவது சமீபமாக அதிகரித்திருக்கிறது. பொறுத்துப்பொறுத்துப் பார்த்த பெண்ணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கணவனிடம் சொன்னால், சகோதர பாசத்தில் தன்னை நம்பாமல் போவது மட்டுமல்லாமல், தன்மீதே சந்தேகம் கொள்ள்வைத்துவிடும் என்பதால், கணவர்பக்க உறவின பெண் ஒருவரிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்கிறார். பெண்ணுக்கு எதிரி பெண்ணே என்பதுபோல, அந்த உறவுக்காரப் பெண் இட்டுகட்டி தட்டை திருப்பிப்போட்டுவிடுகிறார் ஊராரிடம்.

Panchayat atrocities

ஊரார் ஒன்றுசேர்ந்து பஞ்சாயத்து வைக்கிறார்கள். திருமணம் ஆனவள் அதுவும் கொழுந்தனாரிடமே தவறாக நடக்கப் பார்க்கிறாள் என்பதாக  பஞ்சாயத்து அவர்களாக பேசி அவர்களாகவே தீர்ப்பு சொல்லிவிட்டார்கள். தீர்ப்பு என்ன தெரியுமா? பாதிக்கப்பட்ட பெண்ணின் உடைகளை களைந்து, அவரது தலைமுடியை வெட்டி அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். செய்யாத குற்றத்திற்காக அவமானத்தை சுமந்த அப்பெண் வெகுண்டெழுந்து காவல்துறையில் புகார் செய்துவிட்டார். உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை, புகார் பதிவுசெய்த 11 பேரையும் தேடும்பணியை முடுக்கிவிட்டுள்ளது.