எல்லாரும் பின்னாடி தான் பேசுறாங்க: மோகன் வைத்யா மீது கடுப்பான சாக்ஷி

 

எல்லாரும் பின்னாடி தான் பேசுறாங்க: மோகன் வைத்யா மீது கடுப்பான சாக்ஷி

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயதில் மூத்தவராக இருப்பவர் மோகன் வைத்யா. அதனால் அவரால் கடினமான  டாஸ்க் செய்வது சாத்தியமாகாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் அவர் கடந்த முறை கொடுத்த தலைவர் போட்டியில் வயது காரணம் காட்டி பாதியில் பின் வாங்கினர்.  

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் மோகன் வைத்யா, கேப்டன் சாக்ஷியிடம் தனக்கு தண்ணீர் ஒத்து கொள்வதில்லை என்றும், தன்னால் பாத்ரூம் சுத்தம் செய்ய முடியவில்லை என்றும், அதனால் தனக்கு வேறு வேலை ஒதுக்குமாறும் கூறுகிறார். 

இது பற்றி  சாக்ஷி, ரேஷ்மாவிடம் கூறிக் கொண்டிருக்கும்போது அங்கும் வந்த மோகன் வைத்யா, ‘எதுவாக இருந்தாலும் நேரடியாக பேச வேண்டியது தானே என்று சாக்ஷியிடம் கேட்க, அதற்கு சாக்சி, ‘இங்குள்ள யாரும் நேரடியாக பேசுவதில்லை, எல்லாரும் பின்னாடி தான் பேசுறாங்க’ என்று கூறுகிறார். மேலும் இவரால் வீட்டில் உள்ள வேலையே செய்ய முடியாத சூழ் நிலை உருவாகியுள்ளது. அதனால் வரும் வாரங்களில் இவர் எலிமினேட் செய்ய நிறைய வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.