எல்ஐசி ஊழியரை கொலை செய்த மனைவி: கடலூரில் பரபரப்பு!

 

எல்ஐசி ஊழியரை கொலை செய்த மனைவி: கடலூரில் பரபரப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிவேலை காரில் கடத்திய சிலர் அவரை கொலை செய்ததாகத் தெரிகிறது

கடலூர்: என்.எல்.சி ஊழியரை  அவரது மனைவியே அடித்துக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

கடலூரில் என்.எல்.சி இரண்டாவது சுரங்க ஊழியர் பழனிவேல். அவரது மனைவி அஞ்சலை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிவேலை காரில் கடத்திய சிலர் அவரை கொலை செய்ததாகத் தெரிகிறது. பின்னர் விழுப்புரம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்  பழனிவேலின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

murder

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பழனிவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

police

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  பழனிவேலின் மனைவி அஞ்சலை உள்பட 4 பேர் சேர்ந்து பழனிவேலை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக நெய்வேலி டவுன்சிப் போலீஸ் அஞ்சலையிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.