எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி: திருத்தணியில் பரபரப்பு!

 

எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி: திருத்தணியில் பரபரப்பு!

5 மாதங்களுக்கு முன் காணாமல்போன பள்ளிச் சிறுமி எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி: 5 மாதங்களுக்கு முன் காணாமல்போன பள்ளிச் சிறுமி எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பள்ளி சென்ற அவர், மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்  கீச்சலம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் மனித எலும்புத் துண்டுகள் கிடப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனருகில் பள்ளி சீருடை, புத்தகப்பை, தலைமுடி உள்ளிட்டவை புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தகவலறிந்து சென்ற திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னி நேரில் விசாரணை மேற்கொண்டார். 

இதையடுத்து 5 மாதங்களுக்கு முன் காணாமல்போன பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பரிசோதிக்க அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.