எலுமிச்சை பழத்தை பறக்கவிட்ட மந்திரவாதிகள்: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!
திருப்பதி அருகே மந்திர சக்தியால் எலுமிச்சை பழத்தை பறக்கவிட்டு பெருமாள் கோயில் புதையலை எடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர்: திருப்பதி அருகே மந்திர சக்தியால் எலுமிச்சை பழத்தை பறக்கவிட்டு பெருமாள் கோயில் புதையலை எடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் புதையல் இருப்பதாகப் பேசப்படுகிறது. இதனால் அப்பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் தங்கி பூஜைகள் செய்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதிக்கு வந்த கிராமத்தினர் அவர்களைப் பிடிக்க முயன்றுள்ளனர்.இதில் இருவர் தப்பிவிட இருவர் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய இருவரை ஏர்ரவாரிப்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்த விசாரணையின் போது, பிடிபட்டவர்கள் திருப்பதியை சேர்ந்த பட்டாபிராம் ரெட்டி, ஒம் பிரகாஷ் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் போலீசார் முன்னிலையில் எலுமிச்சை பழத்தை பறக்கவிட்டு வேடிக்கை காட்டியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.