எம்.பி தொகுதி நிதியை ரத்து செய்தது நியாயமற்றது! – கேரளா எதிர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்தது நியாயமற்றது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்வது என்ற மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனாலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக ரத்து செய்திருப்பது நியாயமற்றதாக, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம். எங்களின் சில கேரள எம்.பி-க்கள் அந்த நிதியை மிகச்சிறப்பான முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இது எங்கள் மாநிலத்துக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
We welcome the Union Govt’s decision to cut the salaries and pensions of MPs by 30%. However, we feel that the decision to suspend MPLADS is illogical and amounts to an anti-federal move. Some MPs of Kerala were making good use of it; which will now be lost to the State.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) April 7, 2020