எம்.பி தேர்தல்: ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்!

 

எம்.பி தேர்தல்: ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்!

தமிழகத்திலிருந்து காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் மூன்று தி.மு.க வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் மூன்று தி.மு.க வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளரிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

dmk-mp-seat

முன்னதாக தி.மு.க வேட்பாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர்.