எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பெயரைச்சொல்லி பணத்தை ஆட்டைய போடப்பார்க்கிறாரா ஜெ.தீபா!?

 

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பெயரைச்சொல்லி பணத்தை ஆட்டைய போடப்பார்க்கிறாரா ஜெ.தீபா!?

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த போது,கதவைச் சாத்தி யாருடனும் கூட்டணி இல்லை

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த போது,கதவைச் சாத்தி யாருடனும் கூட்டணி இல்லை என்று அதிரவைத்தவர் ஜெ.தீபா.அதுக்கப்புறம் என்ன நினைத்தாரோ,அ.தி.மு.க-விற்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவிப்பதாக சொன்னார்.தவிர,அ.தி.மு.க தலைவர்கள் வேண்டுகோள் வைத்தால் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் பெருந்தன்மையோடு சொல்லியிருக்கிறார்.
 

தொண்டர்கள் புகார்

deepa

இதனால்,அ.தி.மு.க-வின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட நிலையில்,எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொதுசெயலாளர் எங்கள் பணத்தை ஆட்டைய போடப்பார்க்கிறார் என்று அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்கள் புகார் எழுப்பியிருக்கிறார்கள்.
 

அவர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டு இதுதான்-தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று தலைமை சொன்னது.அதற்கான விருப்பனு வாங்கப்படும் என்று சொன்னதால்,கிட்டத்தட்ட 160 பேர் வரை ஆண்களும் பெண்களுமாக விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள்.ஆண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும்,பெண்களுக்கு இரண்டாயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலித்திருக்கிறார்கள்.
 

அதிமுக-வுக்கு ஆதரவு

deepa

திடீரென்று அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.அதை நாங்கள் வரவேற்கிறோம்.தேர்தலில் போட்டியிடப் போகிறோம் என்று நம்பித்தான் ஊரிலிருந்த கிளம்பி வந்து பணம் கட்டினோம்.கட்டணம் போக,போக்குவரத்து செலவு உட்பட பத்தாயிரம் ரூபாய் ஒவ்வொருவருக்கும் செலவாகியிருக்கிறது. ஏற்கனவே சொந்த காசில்தான் கட்சி நடத்துகிறோம்.தேர்தலைக்காட்டி பணத்தை ஏமாத்தப் பார்க்கிறாங்க என்று கட்சி அலுவலகம் முன் நின்று கண்ணை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள் கட்சி தொண்டர்கள்.
 
தீபா தரப்பில் இதை டீல் பண்ணும் ஆட்கள்,ஊருக்கு போங்க உரிய நேரத்தில் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும் என்று சொல்கிறார்களாம்! எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொண்டர்கள்!?

இதையும் வாசிக்க: பலமுறை வீடியோ கால் மற்றும் செக்ஸ் சாட்டிங் செய்துள்ளேன்: பிரபல நடிகை ஓபன் டாக்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!