எம்.எல்.ஏ. தொடர்ந்து தொல்லை தந்தார்: மார்பிங் புகைப்படங்கள் வெளியானது; பிரபல நடிகை ஓபன் டாக்!

 

எம்.எல்.ஏ. தொடர்ந்து தொல்லை தந்தார்: மார்பிங் புகைப்படங்கள் வெளியானது; பிரபல நடிகை ஓபன் டாக்!

தனது மார்பிங் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியபோது தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன் என்று நடிகை ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார்

மும்பை: தனது மார்பிங் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியபோது தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன் என்று நடிகை ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமாவில் நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், சலங்கை ஒலி என குறைந்த அளவிலான படங்களில் நடித்திருந்தாலும் நடிகை ஜெயப்பிரதாவுக்கு  ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அரசியலில்  நுழைந்து  எம்.பியான ஜெயப்ரதா சமீபத்தில்  ‘கேணி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

jaaya

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர்,  ‘எனது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த நேரத்தில் கதறி அழுதேன். இனி வாழக்கூடாது என தற்கொலை முடிவுக்குச் சென்றேன்.யாரும் எனக்கு உதவி செய்ய முன்வராததால் இப்படியொரு முடிவுக்கு செல்ல நினைத்தேன். அப்போது, அமர்சிங் எனக்கு ஆதரவாக நின்றார். ஆனால்  எங்களை குறித்து அவதூறு பேசினார்கள்.  அவருக்கு நான் ராக்கி கயிறு கட்டி சகோதரி என நிரூபித்தேன். ஆனால், மக்கள் எங்களை இணைத்துப் பேசுவதை நிறுத்தினார்களா? பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பேசுவது பற்றி எனக்கு கவலை இல்லை

jaya

இந்த ஆணாதிக்கச் சூழ்நிலையில் எனக்கான பிரச்னைகள் ஓயவில்லை. சமாஜ்வாதி எம்.எல்.ஏ. ஆஸம் கான் எனக்கு தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக்கொண்டிருந்தார். என் மீது ஆசிட் வீச முயற்சி செய்தார். நாளை உயிருடன் இருப்பேனா என உத்தரவாதம் இல்லாமல் இருந்தேன்’ என்றார். நடிகை ஜெயப்பிரதாவின் இந்த பேச்சு அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.